Posts

Showing posts with the label Srilanka

சங்கக்காராவை ஓரங்கட்டிய டோனி || Sangakkara dismissed Dhoni

Image
டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் என்ற முறையில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்தவர் என்ற வகையில் டோனி, சங்கக்காராவை முந்தியுள்ளார். சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அஷிஸ் நெஹ்ரா பந்தில் கிரெய்க் சிம்மன்ஸ் என்ற வீரர் கொடுத்த கேட்சைப் பிடித்ததன் மூலம் டோனி மொத்தம் 124 பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்திருக்கிறார். இதன் மூலம் இலங்கையின் நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள சங்கக்காராவைக் கடந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி. 151 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் டி20 கிரிக்கெட் விக்கெட் கீப்பிங்கில் முதலிடம் வகிக்கிறார். டோனி 124 விக்கெட்டுகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார். சங்கக்கராவுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தினேஷ் ராம்தின், இந்தியாவின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். T- 20 cricket tournament as the highest wicket -keeper Dhoni in terms of players who dismissals , Sangakkara precedes . Campiyans League match against Perth skarccars asis...

கடற்கரையோரத்திலிருந்த பிரித்தானிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

Image
கடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருந்த பிரித்தானிய யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பொத்துவில் அறுகம்பை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. அறுகம்பை, குடாக்கள்ளி கடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருந்த பிரித்தானிய பெண்ணொருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவத்தில் பாதிகப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மஹேல ஜெயவர்த்தனா ஒரு டெஸ்ட் சகாப்த்தம் - சிறப்பு கட்டுரை

Image
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்ற கையோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜெயவர்த்தனே விடைபெற்றார். ஆனால் இவர் 2015 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுகிறார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஜெயவர்த்தனே தன் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 11,814 ஓட்டங்களை 49.84 என்ற சராசரியில் எடுத்துள்ளார். தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலே அரைசதம் விளாசினார். ஆனால் அவரது அந்த அரைசதம் கண்டுகொள்ளப்படவில்லை. ஏனெனில் இலங்கை 952/6 என்ற டெஸ்ட் சாதனை ஓட்டங்களை எட்டியது. சனத் ஜெயசூரியா 340 ஓட்டங்களையும், ரோஷன் மகானாமா 225 ஓட்டங்களை எடுக்க இருவரும் இணைந்து 576 ஓட்டங்களை சேர்த்து இந்திய பவுலர்கள் கையை ஒடித்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இதே மட்டமான ஆடுகளத்தில் தான் அ...

யாழில் இரு குழுக்களிடையே மோதல்: ஒருவர் படுகாயம், பஸ் சேதம்

Image
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் தனியார் பஸ் ஒன்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மோதல் சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த 22 வயதுடை தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் என்ற இளைஞரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம்- கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் சம்வத்துடன் தொடர்டைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் பேஸ்புக் விபரீதம்! சகோதரிகளுக்கிடையில் தற்கொலை முயற்சி

Image
வீட்டில் இருந்த கணனியில் மூத்த சகோதரிக்குச் சொந்தமான பேஸ்புக் கணக்கை தங்கை பார்வையிட்டதால் ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை நல்லுார்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கு முயன்ற யுவதி பல்கலைக்கழகத்தில் பயின்று கொண்டு அரச திணைக்களம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் தெரியவருகின்றது. இவா் தனது பேஸ்புக்கை திறந்து வைத்துவிட்டு அவசர அலுவல் காரணமாக வீட்டுக்கு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்த போது யுவதியின் தங்கை தனது முகப்புத்தகத்தைப் பார்வையிட்டு்க் கொண்டிருந்ததால் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது தமக்கையின் முகப்புத்தகத்திற்கு தகவல்கள் அனுப்பியிருந்த சில ஆண் நண்பா்களின் பெயா்களைக் கூறி தாய்க்கு அந்த விபரங்களைத் தெரியப்படுத்திய போது கோபமடைந்த யுவதி அறையை மூடிவி்ட்டு துாக்கில் தொங்க முயன்றுள்ளார். யுவதியின் இச் செயலைப் பார்த்த தாயும் சகோதரியும் கத்திக் கொண்டு தெருவால் சென்றவா்களை அழைத்து கதவை உடைத்து யுவதியைக் காப்பாற்றியதாகத் தெரியவருகின்றது. இதே நேரம் கதவை உடைத்து உள்ளே நுழைய முற்பட்ட வழிப்போக்கா் ஒருவா் கதவின் பலகை முதுகில் கிழ...