Posts

Showing posts from June, 2014

பெண்களுக்கு ஆபத்தை தரும் முத்துப்பிள்ளை கர்ப்பம்

Image
கர்ப்பம் தரிக்கிற பெண்களில் ஒன்று முதல் இரண்டு சதவிகிதத்தினருக்கு முத்துப்பிள்ளை கர்ப்பமும், அதில் 10 முதல் 15 சதவிகிதத்தினருக்கு புற்றுநோய் அபாயமும் இருக்கிறது. ஆணின் 23 குரோமோசோம்களும், பெண்ணின் 23 குரோமோசோம்களும் இணைந்து 46 குரோமோசோம்களாக மாறும். முழு முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் கரு முட்டையில் தாய்வழி குரோமோசோம்கள் இருப்பதில்லை. மேலும் தந்தையின் விந்தணுக்களின் குரோமோசோம்கள் இரட்டிப்பு அடையும். தாய்வழி குரோமோசோம்கள் முற்றிலும் இல்லாமல் போவதால், கருவோ, கரு வளரும் பையோ அல்லது நஞ்சுத் திசுக்களோ இருப்பதில்லை. மாறாக நஞ்சு, திராட்சை கொத்து போலக் காட்சியளிக்கும். இதையே முத்துப்பிள்ளை கர்ப்பம் என்கிறோம். சாதாரண கர்ப்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையில்கூட பாசிட்டிவ் என்றே வரும். 45 நாட்களில் ஸ்கேன் செய்து பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் எனத் தெரிந்தால், கருவைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், கர்ப்பத்தைக் கலைப்பதோடு, பிரச்சனை முடிந்தது என அலட்சியமாக இருக்க வேண்டாம். கரு வெளியேறிய பிறகும், எங்கேயாவது ஒட்ட

Android 5.0 இயங்குதளத்தின் படங்கள் வெளியாகின

Image
கூகுள் நிறுவனத்தின் மொபைல் சாதனங்களுக்கான Android இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 5.0 விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் இவ் இயங்குதளத்தின் டெவெலொப்பர் பதிப்பின்(Developer) பயனர் இடைமுகத்தினை உள்ளடக்கிய படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதில் Home Screen இல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர 5,000 புதிய APIs (Application programming interface) இனை உள்ளடக்கியதாகவும் Android 5.0 இயங்குதளதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பின்வரும் இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். http://developer.android.com/preview/index.html

கருப்பாக இருக்கிறீர்களா? கவலையை விடுங்க!

Image
இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கருப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். * பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்

குளிக்கும் பொழுது வியர்வை நாற்றம் போக

Image
குளிக்கும்பொழுது வெதுவெதுப்பான நீரில் சிறிது வேப்பிலையைப் போடவும். அதன் சாறு இறங்கிய பிறகு அதை எடுத்துவிட்டுக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம். ஒரு வாளி தண்ணீரில் 2 சிட்டிகை கற்பூரத்தூளைப் போட்டுக் குளித்தால் வியர்வை நாற்றம் அகலும். முகத்திற்கு கோடைக்காலத்திற்கென்று பிரத்யேகமாக பழவகை ஃபேஷியல் செய்வது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, தக்காளி, வெள்ளரிக்காய், இளநீர் இவைகளைக் கொண்டு முகத்திற்குப் பூசலாம். (சைனஸ் தொந்தரவு உள்ளவர்களைத் தவிர அனைவரும் இந்த முறையைப் பின்பற்றலாம்). கோடைக்காலங்களில் வெளியில் அலைய நேரிடும்பொழுது இளநீர், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழ ஜூஸ் அருந்துவது நல்லது. சன் ஸ்ட்ரோக் (Sun Stroke) வராமல் தடுக்க ஒரு வெங்காயத்தைக் கையிலோ, உடலிலோ வைத்திருந்தால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம். எண்ணெய்சருமம் உடையவர்களுக்கு தலைமுடிக்கு அருகிலேயே எண்ணெய் சுரப்பி உள்ளது. எண்ணெய் சுரப்பிகளிலிருந்து அதிகம் எண்ணெய் வெளிவரும். வியர்வைச் சுரப்பிகளிலிருந்தும் வியர்வை அதிகமாக வரும். இது குறிப்பாக டீன் ஏஜில் உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும். பருத்தொல்லை கோடைக்காலத்தில் எண்ணெய் சருமத்தில்

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

Image
ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன்பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கேதக்குறிப்புகள் எழுதப்பட்டு விடுகின்றன. அதில் அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அதன் அறிவு, ஆற்றல் என அனைத்து சமாச்சாரங்களுமே பதியப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பெண் குழந்தையின் கருவில், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி வேகமாகத் தான் இருக்கும்., அல்லது மெல்லத்தான் இருக்கும், அல்லது நிதானமாகத்தான் இருக்கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பருவம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப்பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற்றி அமைக்க முடியாது. இயற்கையை வென்றது யார்

கன்னியர்களின் கன்னித்திரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் படுபயங்கர வரலாற்றுத் தகவல்கள்!

Image
கன்னித்தன்மை, கற்பு… இந்த இர ண்டு வார்த்தை களுக்கும் பழங் காலத்தில் அர்த்தமே வேறு. கால ப் போக்கில்தான் ஒவ்வொரு சமூ கமும் இந்த வார்த்தை களுக்கு கலாசார முகமூடி அணிவித்து, ஏராளமான பெண்களை இரக்கமி ல்லாமல் கொன்று போட்டிருக்கி றது. எந்த தப்பும் செய்யாத பெண் களைக்கூட ‘சோரம் போனவர்க ளாக’ முத்திரை குத்தி, உறவினர்க ளை விட்டே கல்லால் அடித்து சாகடித்த ரத்த வரலாறு பல நாடுக ளுக்குச் சொந்தம். ‘‘ஒரு பெண் செக்ஸ் உறவை ஒருமுறைகூட அனுபவித்தது இல் லை என்றால், அவரது பிறப்பு உறுப்பின் பாதுகா ப்பு கவசமான ‘கன்னித்திரை’ கிழியாமல் இருக்கு ம். இப்படி கன்னித் திரை கிழியாமல் இருப்பவரே கன்னி’’ இதுதான் கன்னித் தன்மைக்கு இப்போது அர்த்தமாக சொல்லப்படுகிறது. ஆனால், பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வ கையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம். கன்னி என்பதற்கு ஆங்கிலத்தில் ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிக ளில் புழக்கத்தில் இருக்கும் ‘வர் கோ’ என்ற வார்த்தையிலிருந்து ‘வர்ஜின்’ வந்தது

தம்பதிகள் வாழ்வில் ஆனந்தமாய் வாழ வேண்டுமா? இதோ வழிகள்

Image
திருமணமான தம்பதியர்களின் வாழ்வில் ஆரம்பத்தில் இனிமையான நாட்கள் நீடித்தாலும், காலப்போக்கில் அந்த நாட்கள் மெல்ல குறைய ஆரம்பிக்கின்றனர். இதற்கு காரணம் ஒருவருக்கொருவர் சரியாக புரிந்துகொள்ளாமையே காரணம். இனிமையான நாட்களுடன் நல்லறமாய், இல்லறம் நடக்க இதோ வழிகள். நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். வருங்காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிறதோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். பாதுகாப்பு ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விடயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா வ

7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுறை slim body in 7 days

Image
ஒரே வாரத்தில் உடல் எதையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை. ஏழு நாட்களும் தினசரி குறைந்தபட்சம் 10 குவளை தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். நாள் 1: முழு நாளும் பழ வர்க்கங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப் பழங்களுக்கு மட்டும் அனுமதியில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். melon ஐட்டம்ஸ் அதிகம் பயன்படுத்துங்கள்.(பழச்சாறு கூடாது. பழ வகைகளை அப்படியே சாப்பிட வேண்டும்) நாள் 2: முழு நாளும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சமைத்தோ சமைக்காமலோ விருப்பம் போல் சாப்பிடலாம். சமைக்கும்போது எண்ணெய், தேங்காய்க் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. காலை உணவுக்குப் பெரியதொரு உருளை கிழங்கைச் சமைத்து சாப்பிட வேண்டும். நாள் 3: பழ வகைகளும் காய்கறிகளும் சாப்பிட வேண்டும். வாழைப்பழம் கூடாது. உருளை கிழங்கு கூடாது.(பழச்சாறு கூடாது) நாள் 4: முழு நாளுக்கு 8 வாழைப் பழங்கள் 3 குவளை பால். தேவையெனில் ஒரு குவளை காய்கறி சூப் சாப்பிடலாம். சூப்பிற்கு எண்ணெய் கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. நாள் 5: ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும