Posts

Showing posts with the label Movie Review

மெட்ராஸ் திரைவிமர்சனம் || Madras Film Review

Image
அட்டக்கத்தி படத்தின் புறசென்னையை காட்டிய ரஞ்சித் மீண்டும் வடசென்னையை யதார்த்தமாக காட்டியிருக்கும் படம் மெட்ராஸ்.சுவருக்கு ஒரு போரா பெரிய அக்கப்போராகல்லவா இருக்கிறது என்பது போல பெரிய சுவரில் விளம்பரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போராட்டமும், அதற்காக உயிர்கள் பலியாவதும் தான் கதை.தொடர் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் கார்த்தி. நட்பு, காதல், துரோகம், வலி என ஒவ்வொன்றையும் எதிர்கொள்வதில் பிரமாதப்படுத்துகிறார். நண்பராக வரும் கலையரசனை இனி அதிகபடங்களில் காண வாய்ப்புள்ளது.மலையாள புதுவரவான கேத்ரின் தெரஸாவுக்கு டுயட் பாடுவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது.வட சென்னை இளைஞரான கார்த்தி அவரது நண்பர் கலையரசனுடன் ஜாலியாக சுற்றிக்கொண்டு நடுவில் கேத்ரின் தெரசாவை காதலித்து வருகிறார். இந்த சமயத்தில் அரசியல்வாதிகளின் சண்டையில் மாட்டி என்னவானார் என்பதே மீதி கதை.கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது கருத்து சொல்லி விட்டுப்போகும் மனநிலை பாதிக்க பட...

ஆடாம ஜெயிச்சோமடா திரைவிமர்சனம் || Atama jeyiccomata Movie Review

Image
தமிழ் சினிமாவின் தற்போதைய ட்ரண்ட் டார்க் ஹுயுமர் தான். இதை மையமாக கொண்டு வெளிவந்த மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதே பாணியில் வெளி வந்திருக்கும் படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா. கால்டாக்ஸி டிரைவரான கதாநாயகர் கருணாகரன், பத்து லட்சத்திற்கும் மேல் கடனில் இருக்கிறார். பிறந்ததில் இருந்து காமன் பாத்ரூமில் காலை கடன்களை முடிக்கும் காலனி குடித்தனத்தில் காலம் தள்ளும் கதாநாயகி விஜயலட்சுமி. வீட்டுக்குள்ளேயே பாத்ரூம் இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக தன் தள்ளுவண்டி கடையில் நாஷ்டா திண்ண வரும் கருணாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், முதல் இரவு முடியும் தருவாயில் கருணா பெரும் கடன்காரன், அவர் வீட்டில் தான் வட்டிக்கு கொடுத்த கடன்காரர்கள் எல்லாம் வந்து போவார்கள்...எனும் விஷயம் தெரிந்து விவாகரத்து வாங்காத குறையாக கடனை அடைத்து விட்டுவா...என விலகி போகிறார். இந்நிலையில் கருணாவின் கால்டாக்ஸியில் பை நிறைய பணத்துடன் வந்து ஏறும் கிரிக்கெட் சூதாட்ட தரகர் பாலாஜி, தன்னை சரியாக கவனித்துக் கொண்டால் நடக்க இருக்கும் 20-20 மேட்ச் முடிந்ததும் உன் கடனை நான் அடைக்கிறேன் என வாக்க...

அரண்மனை (2014) திரைவிமர்சனம் || Aranmanai Movie Review

Image
நடிகர் : வினய் நடிகை : ஹன்சிகா இயக்குனர் : சுந்தர். சி இசை : பரத்வாஜ் ஓளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார் ஜமீன்தார் குடும்ப வாரிசுகளான சித்ரா லட்சுமணன், கோவை சரளா மற்றும் வினய் ஆகியோர் தங்களின் பாரம்பரிய அரண்மனையை விற்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் மூவரும் கையெழுத்திட்டால் தான் அந்த அரண்மனையை விற்கமுடியும் என்பதால் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த அரண்மனையை வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறார் சரவணன். அரண்மனையை விற்பதற்காக பத்திரம் ரெடியாகும் வரை வாரிசுகள் அனைவரும் அங்கு தங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி வினய் மற்றும் அவரின் மனைவி ஆண்ட்ரியா, மனோபாலா-கோவை சரளா இவர்களின் மகன் நிதின் சத்யா, சித்ரா லட்சுமணன் மற்றும் அவரின் மகள் ராய் லட்சுமி ஆகியோர் அந்த அரண்மனையில் தங்குகிறார்கள். இதற்கிடையில் அந்த அரண்மனையை விற்பனைக்கு வருவதை அறிந்து அதே ஊரைச் சேர்ந்த சந்தானம், தனக்கும் சொத்தில் பங்குண்டு என்பதை அறிகிறார். ஆனால் ஆதாரம் இல்லாததால் வேலைக்காரனாக அங்கு நுழைகிறார். இந்த அரண்மனையில் ஏதோ மர்மம் இருப்பதாக அனைவரும் அறிகிறார்கள். இந்நிலையில் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர்.சி அர...

ஜீவாவுக்கு யூ சான்றிதழ் || U certificate for Jeeva

Image
பாண்டியநாடு படத்துக்கு பிறகு சுசீந்திரன் இயக்கி உள்ள படம் ஜீவா. இதில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடித்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி விளையாட்டின் உள், வெளி அரசியலை கதை களமாக வைத்ததைபோல ஜீவாவில் கிரிக்கெட் விளையாட்டை கதை களமாக வைத்திருக்கிறார். கிரிக்கெட் அணியில் சேர ஒரு நடுத்தர இளைஞன் படும் துயரங்களே படம்.படம் தணிக்கை குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இயக்குனர் சுசீந்திரனையும், விஷ்ணு விஷாலையும் பாராட்டி உள்ளனர். அதோடு ஒரு கட் கூட கொடுக்காமல் படத்துக்கு யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். தயாரிப்பு நிறுவனம் சார்பில் வரிவிலக்கிற்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரித்தது சுசீந்திரனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நெக்ஸ்ட் பிக் பிலிம். இதனை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரியும், ஆர்யாவின் ஷோ பீப்பிள் நிறுவனமும் வாங்கி வெளியிடுகிறது. படம் வருகிற 26ந் தேதி ரிலீசாகிறது. After the film, the film Jeeva pantiyanatu Suseenthran driver . Vishnu Vishal as the hero , heroine and stars sritivya . V...

அமரகாவியம் (2014) திரை விமர்சனம || Amarakaviyam (2014) Reviews

Image
ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் நாயகன் ஜீவா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நண்பராக பாலாஜியும் நாயகியான கார்த்திகாவும் அதே வகுப்பில் படித்து வருகிறார்கள். பாலாஜி கார்த்திகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். அவளிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார். காரணம், பாலாஜியின் தந்தையும் கார்த்திகாவின் தந்தையும் நண்பர்கள். தன் காதலை கார்த்திகாவிடம் சொன்னால் தன் தந்தைக்கு தெரிந்து விடும் என்ற பயத்தால் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார். இதனால் தன் காதலை கார்த்திகாவிடம் சொல்ல ஜீவாவை தூது அனுப்புகிறார். ஜீவாவும் பாலாஜியின் காதலை கார்த்திகாவிடம் சொல்கிறார். ஆனால் கார்த்திகாவோ நான் பாலாஜியை காதலிக்கவில்லை. உன்னைதான் காதலிக்கிறேன் என்று ஜீவாவிடம் சொல்கிறார். மேலும் நாளை இதே நேரத்தில் இதே இடத்தில் சந்திக்கும் போது உன் பதிலை கூறுமாறு சொல்கிறாள் கார்த்திகா. இதனை கேட்டு அதிர்ச்சியடையும் ஜீவா, வீட்டிற்கு சென்று சிந்தித்து மறுநாள் தன் காதலை சொல்கிறார். அதன் பின் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.ஜீவாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர் என்று பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார் க...

அமரகாவியம். திரை விமர்சனம் Amarakaviyam. Reviews

Image
 விஜய் ஆண்டனியின் முதல்படமான 'நான்' படத்தை இயக்கிய ஜீவா ஷங்கரின் இரண்டாவது படம். ஆர்யாவின் தம்பி நடித்த படம்,. ஆர்யாவின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களுக்கே வராத நயன்தாரா இந்த படத்தின் புரமோஷனுக்கு வந்ததோடு மட்டுமின்றி இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து கதறி அழுதார் என ஊடகங்கள் கிளப்பிய இலவச விளம்பரம் ஆகியவை அனைத்து சேர்ந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்தாரா? என்றால் சந்தேகம்தான் என்று தோன்றுகிறது. முதல் காட்சியிலேயே சத்யாவை ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து செல்கின்றனர். செல்லும் வழியில் சத்யாவின் பிளாஷ்பேக்தான் கதை. சத்யாவும், மியா ஜார்ஜும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள். சத்யாவின் நண்பன் மியாவை காதலிக்கிறார். நண்பனின் காதலுக்கு தூது போக சென்ற சத்யாவுக்கு மியா கொடுக்கும் அதிர்ச்சி, மியா சத்யாவை காதலிக்கிறார் என்பதுதான். இதனால் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள் தான் கதை. சத்யா ஏன் ஜெயிலுக்கு போனார் என்பதையும் கிளைமாக்ஸில் சொல்கிறார்கள். படத்தில் உருப்படியாக இருப்பத...

சிநேகாவின் காதலர்கள் – விமர்சனம் Snehavin Kathalargal Movie Review

Image
தமிழ் சினிமாவில் கதாநாயகி கதாபாத்திரங்களின் நிலை என்பது அஞ்சான் சமந்தாவின் டவுசர் போலத்தான். இருக்கு ஆனா இல்லை ரகம் தான். எல்லாப்படத்திலும் ஹீரோயின் என்று ஒருவர் இருப்பார். ஆனால் கதை நாயகியாய் இருக்க மாட்டார். பொதுவாக அழகான பெண்களுக்கு சினிமா வாய்ப்பு என்பது ஆண்களை விட மிக எளிதாய் கிடைத்துவிடும். கல்லூரி வாசலில், காபி ஷாப்பில் என துரத்திப்பிடித்து  வாய்ப்பு கொடுப்பார்க்ள. ஆனால் அழகான பெண் கதாபாத்திரங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது.  கதாநாயகனுக்கு மூடு வரும்போது கூட ஆடுவதற்கும், வில்லனுக்கு மூடு வரும்போது படாத பாடு படுவதற்குமான ஜல்லி கதாபாத்திரங்களே நம் சினிமா கதைகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றன. இந்த சினிமாவுக்கு தெரியாத பல சுதந்திரமான நிஜ பெண் கதாபாத்திரங்கள் எக்காலமும் நம் அருகில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். தன் உடை, தன் நட்பு, தன் காதல், தன் காமம் என தன் வாழ்க்கையை தானே முடிவு செய்யக்கூடிய, தைரியமாக காதலில் விழுந்து அதில் பிரச்சினை என்றால் அதைவிட தைரியமாய் அதிலிருந்து எழுந்து, வாழ்க்கையின் ஓட்டத்தில் கலந்து, விரும்புவனோடு இணைந்து வ...