Posts

Showing posts from April, 2014

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

Image
உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A     B     C     D     E     F     G     H     I     J     K     L     M     N     O   P    Q    R     S      T     U     V    W    X     Y     Z

W ” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
வெற்றி பெறும் காரியங்களை மட்டும் தன் அறிவாற்றலினால் எடுத்துக்கொண்டு அதிலேயே முனைப்பாக செயல்பட்டு வெற்றிக்கனியை வெகு எளிதில் பெற்றுவிடும் உங்களுக்கு கிடைக்கப் பெற்ற இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் இரு பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளேயே தங்கி விடுவதால் அடிக்கடி ஜலதோசம், தும்மல், இருமல் போன்றவற்றை வாரி வழங்கும், தங்களின் தனி முயற்சியால் முத்திரை பதிக்கும் செயல்களால் பெரும் பெயர் பெறுவீர்கள், காதல் திருமணங்களை செய்து புரட்சிகளை ஏற்படுத்துவீர்கள். எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு முனைப்பு, ஒழுங்குடன் செயல் புரிவதால் ஏற்றத்தை மிக விரைவில் சந்திக்க முடியும். பிரபலங்கள் உங்கள் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பல விதங்களில் நன்மைகள் புரிவர். வெள்ளை நிறத்தையும், பச்சை நிறத்தையும் அதிகம் விரும்பும் நீங்கள் வெகுளித்தனமாகவும் இருப்பீர்கள். சிறு வயதிலேயே வீடு, வாகனம், ஆள்பலம் போன்றவற்றை பெற்று அனுபவிப்பீர்கள், பெண்களால் வெகு எளிதில் சுவரப்படுவதை தங்களின் ‘பிளஸ்’ பாயிண்ட் என கருதி வியாதிகளை வரவழைத்துக் கொள்பவர்களும் உண்டு, பெற்றோர்கள் சொல்படி கேட்காதது இவர்களின் ‘மைனஸ்’. இதனால் பல பின்னடைவுகள் உண்

`X’ என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா?

Image
நாலா பக்கங்களிலும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வருவதில் அதிக ஆர்வமும், அதைப்போல் செயல்பாடுகளும், பிளான் மனதிற்குள் போடுவதில் வல்லமையும், பிறர் உள் மனதை எளிதில் தெரிந்து கொண்டு அவர்கள் நினைப்பதிற்கேற்ப செயல்புரிந்து அவர்களை வளைத்து போடுவதும், ஜனங்களை வசீகரிக்கும் திறமையும், புகழ் தன்னைத் தேடி வருவது போல் செய்துவிடும் பக்குவமும், எந்த பணியிலிருந்தாலும் அதை தன் சொந்த பணியாக ஏற்றுக்கொள்வதும், பிறர் ஒதுக்கிய காரியங்களை மிக எளிதில் செய்து விரைவாக பணியாற்றுகிறார் என்ற பெயரும், தன்மேல் அதீத நம்பிக்கையும் கொண்ட `X’ என்ற எழுத்தை பெயரில் முதல் எழுத்தாக பெற்ற உங்களுக்கு சூரியக்கதிர்களின் ஒரு புள்ளி குவிப்பு உள்ளேயே இருந்து செயல்படுவதால் கண்களிலும், பேச்சுவன்மையிலும், காதல் கலைகளிலும் நீங்கள் ஒரு ஜாம்பவான்தான். எந்த இடத்தில் வேலை செய்தாலும் அங்கே உங்கள் சுறுசுறுப்பு பற்றி ஒரு விவாதமே நடந்து கொண்டிருக்கும். மூளையைப் போட்டு கசக்கி கொண்டிருக்கும் இக்கட்டான பணி பற்றிய செய்தி தெரிவித்தால் ப்பூ இவ்வளவுதானா இதோ முடித்து தருகிறேன் என்று மழைக்கு முன் ஏற்படும் `மின்னல்’ போல் பளிச்சென முடித்து ஒரு புன்னகை

“Y” என்ற எழுத்தில் வருபவர்கள் எப்படி இருப்பாரகள்

Image
மற்றவர்களை வழி நடத்தி செல்லும் போக்கும், தனக்கு யாரும் புத்தியை புகட்டக் கூடாது என்பதில் முனைப்பும், புகழில் நாட்டமும், ஒழுங்கும், கட்டுப்பாடும், தான் மிகுந்த சக்தியுடையவன் என அடிக்கடி சொல்லிக் கொள்வதுமான குணத்தையுடைய `Y’என்ற எழுத்திற்குரியவர்களுக்கு சூரியக்கதிர்கள் உட்குவிவதால் `பலான’ விசயதில் சற்று பவர்புல்லானவர்களாக இருப்பது இயல்பு. நேர்மையின் இலக்கணமாக திகழும் இவர்கள் பெண்களுக்கு அடிபணியும் வாய்ப்பு உள்ளது. வாழ்வில் எவ்வளவு முயற்சி செய்தும் உயர்வுகள் என்னவோ இவர்களை விட்டு பயந்து ஓடிக்கொண்டே இருக்கும். கையொப்பமிடும் போது இடதுபுறம் சாய்த்து போடுவதால் வந்த வினை இது. எனவே கையொப்பமிடுவதை `பாசிட்டிவ்’ ஆக மாற்றிக்கொண்வது அவசியம். சில வேலைகளில் முடிவெடுக்க தெரியாமல் இருதலைக் கொள்ளியாக அல்லாடுவதை சரி செய்ய தகுந்த ஆலோசனைகளை C,G,L,S பெயராக கொண்டவர்களை நாடுவது சிறப்பாகும். அடிக்கடி ஜலதோசம், காய்ச்சல், மூட்டுவலிகள் ஏற்படலாம். உணவுக்கட்டுப்பாடுடன் உறவு கொண்டு இதை நிறுத்தி வாழ்வில் உயரலாம். ஏனைய எழுத்துக்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க  A     B     C     D     E     F     G     H     I     J     K

`Z’ என்ற எழுத்தில் பெயர் தொட‌ங்குகிறதா?

Image
தெய்வீகத்தை தன் தனிக்கொள்கையாக கொண்ட இவர்கள் சொல் எந்த இடத்திலும் சபை ஏற மறுக்கும். காரணம் சூரியக்கதிர்கள் தட்டையான மேற்புரத்தில் தங்க முடியாததுதான். மேலும் கர் வம் கொண்டவர்கள் என்ற இலவச பட்டம் வேறு.  மக்களிடம் தகுந்த மரியாதை கொண்ட இர்கள் மதத்தின் பேரில் மலையளவு நம்பிக்கை கொண்டவர்கள். ஆன்மீக கருத்துக்கள் பரப்புவதில் வல்லவர்களாவர். யார் எவ்வளவு புத்திமதி சொன்னாலும் தன் முடிவுப்படி தான் நடப்பர். இவர்களிடம் இருக்கும் உன்னதமான சக்தியைப் பயன்படுத்தி பலபேர் காரியங்களை சாதித்துக் கொண்டு இவர்களை கழட்டி விட்டு விடுவது உண்டு. உழைப்பை உயர்வுடன் கருதும் இவர்களுக்கு வேலை வாய்புகள் மிக குறைவாகவே கிடைக்கும். இருப்பினும் உணவுக்கு பஞ்சமில்லை. மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருப்பர். கடைசி காலங்களில் மகானுக்கு ஒப்ப இவர்கள் பேசப்படுவர். எந்த காரியத்தையும் அவசரப்படாமல் செய்து வெற்றியின் விளிம்பிற்கு கொண்டுவந்து விட்டு அதன்மேல் சலிப்படைந்து வேண்டாம் என ஒதுக்கி தள்ளி நாட்களையும், பொருட்களையும் வீணடிப்பதை தகர்த்து ஒளிவிளக்காய் திகழ எந்தநிலையிலும் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது உயர்வ

"R” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும், தன்னை பேணுதலும், கனிவான பேச்சும், பிரபலங்களை தன் செயற்கையால் மடக்கும் திறனும் இருக்கும். சேவைப் பணிகளில் வலிய முன் வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். கலைகளில் மிகப்பெரிய நாட்டமும், பெண்களின் பேரில் மதிப்பும், மரியாதை யும், குழந்தைகள் மேல் பிரியமும் வைத்திருப்பர். நல்ல சிந்தனைவாதியான இவர்களுக்கு நீர் சம்பந்தமான நோய் வரலாம். தீர்க்கமான முடிவுகளை உடனே எடுக்க இயலாது. புதிதாக வருபவர்களை நன்கு உபசரித்து அன்னியோன்யமாகி, உடன்பிறந்தவரைப் போல அன்பை பொழிந்து விடுவர். இயற்கையின் இனிய புத்திரர்களான இவர்கள் பஞ்சபூதங்களுக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர். கலைத் துறை, திரைப்படம், பத்திரிகை, புத்தகம், விவசாயம், அரசுப் பணிகள், ஆன்மீகம் போன்றவைகளால் அதிகமான பொருள் வரவு கிடைக்கும். குடும்ப நிகழ்வுகளில் சற்று பட்டும் படாமலும் இருப்பர். உறவினர்களிடம் தன் உள்ளத்து எண்ணங்களை தெர

“S” என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்……

Image
முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு முன், பின் செல்வதால் இவர்களை யாராலும் அடக்க முடியாது. நேர்மை, நீதி, நியாயத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் இவர்கள் தனக்கென்று வரும்போது ‘விதிவிலங்கு’ கேட்பார்கள். அடிக்கடி கோபம் வரும். ஆனாலும், தன் கீழ் பணிபுரியும் பணியாளர்களை நேயத்துடன் நடத்துவது போல பாசாங்கு செய்வர். இறைநேயம், வாக்குசுத்தம் இவர்களை மேலோங்கி நிற்க செய்யும். வயது முதிர்ச்சியடைந்தவர்களிடம் மிக மரியாதை யுடன் நடந்து பெயர் பெறுவர். எங்கு சென்றாலும் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு செல்வமே செயல் படுவர். யானை போன்ற வேகமும், மலை போன்ற குணாதிசயமும் இவர்களை தனித்து காட்டும். பூஜை, ஆச்சாரம், அனுஷ;டானம் இவற்றில் அதிக நம்பிக்கையுடைவர்கள். அதே சமயம் பணியில் கடும் சிரத்தையுடன் இருப்பர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ கோயிலுக்கு சென்றால்தான் சாமியா என்று மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வர். ஆனால், இவர்கள் மட்டும் கோயில், கு

T என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?

Image
T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு பேரைக் கேட்டு செய்வது நல்லது என்று பேச்சுக்கு சொல்லி வைப்பர். இந்த எழுத்தின் மேல் சூரியக்கதிர்கள் பட்டு இடமும் புறமும் சிதறுவதால், இவர்களால் எதிலும் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடிவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. வெட்டு ஒன்று, துண்டு மூன்று என்று அதிரடியாகப் பேசும் இவர்கள் சமுதாயத்தின் மீதும், இயற்கையின் மீதும் அபரிமிதமான பற்று வைத்திருப்பர். மக்கள் மத்தியில் புதுமை விஷயங்கை பரப்பிக் கொண்டேயிருப்பர. வெளியூர் சென்று வந்தால், அங்குள்ள நிலைமைகளை எல்லாம் விபரமாகத் தெரிந்து வந்து மற்றவர்களிடம் பெருமையடிப்பர். சுதந்திரமாக இருக்க விரும்புவர்கள். யாராக இருந்தாலும் தானாக வலிய முன்வந்து நற்பெயர் பெறுவர். முக்கிய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கு பெற விரும்புபவர். தானாகவே போய் முன் வரிசையில் அமர்ந்து விடுவர். அது மட்டுமல்ல. அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கவும் உதவி செய்வர். அரசாங்கத்திற்கே ஆலோசனை கூறும் அளவுக்கு இ

‘U’ என்ற எழுத்தில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்

Image
வாழ்க்கை வாழ்வதற்கே, உலக சுகங்களே சுகங்கள் மற்றையவை எல்லாம் போலித்தனமானவை, என்று கூறும் ‘U’ ன் உள் சூரியக்கதிர்கள் முழுமையாக குவிக்கப்பட்டு உள்ளேயே இருப்பதால் நன்மையும், சில நன்மை குறைவுகளையும் ஏற்படுத் தும். அதிக உஷ்ணத்தை தருவதால் உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. அடிக்கடி நீர் சம்பந்தமான நோய் களை தரலாம் (ஜலதோசம் குளிர்ச்சியாலும், உஷ்ணத்தாலும் வரும்). நடை, உடை, பாவணைகள் சற்று வித்தியாசப்படுத்திக் காட்டும் இவர்களை. அடிக்கடி அயல் தேசங்களுக்கு பயணிக்க வாய்ப்பு தரும். அறுசுவை உணவை விரும்பி உண்ணும் இவர்கள் – கனிவான பேச்சும் – கவர்ச்சியும் கொண்டவர்கள். அழகை ஆராதிக்கும் இவர்கள் ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உடையவர்கள். பிறரிடம் பேசிக்கொண்டே இருப்பர். இதனால் பலர் இவர்களின் விசிறிகளாகி விடுவர். கஷ்டமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். உடல் உழைப்பு என்பது மிகக் குறைவுதான். உலகில் வருங்காலத்தில் நடப்பவைகளை உள்ளுணர்வு மூலம் முன்பே தெரிவிப்பர். சாஸ்திர சம்பிர தாயங்களில் விற்பன்னராக இருப்பர். கலைகளில் அதிக நாட்டம் ஏற்பட்டு இருக்கும் வேலையை உதறிவிட்டு விடுவர். எந்த வேலையையும் ஆரம்பித்தால் முடிக

“V” என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…

Image
V’ என்ற எழுத்து உலகெங்கும் பிரபலமானது. அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்கள் வரை தங்கள் வெற்றியைக் குறிக்க இந்த எழுத்தைப் போன்ற அடையாளத்தையே இரண்டு விரல்களால் காட்டுகிறார்கள். இந்த எழுத்தில் பெயர் துவங்கினால் திறமைசாலிகளாக இருப்பார்கள். சிறந்த பக்தியாளர்களான இவர்கள் ஆன்மீக உலகில் கால் வைத்தால் சிறந்த எழுத்தாளர்களாக வருவர். கவிதை, கதை, கட்டுரை மற்றும் கலையுலகில் கால் பதித்து வெற்றி பெறுவர். மனதிற்குள்ளேயே ரகசியத்தை புதைத்து வைப்பதில் மகா கில்லாடிகள். இறக்கும் வரை வெளியே சொல்லமாட்டார்கள். இவர்கள் தங்களுக்காகவோ, பிறரைக் கவிழ்க்கவோ செய்யப் போகும் செயல்களை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து அமைதியாகவே செய்வர். தங்களால் யார் கவிழ்ந்தார்களோ, அவர்களிடமே சென்று ‘இப்படி ஆகி விட்டதாமே’ என்று ஆறுதலும் சொல்லிவிட்டு வந்து விடுவார்கள். அப்பாவி போன்ற முகத்தோற்றம் இருந்தாலும், தன்னம்பிக்கை உணர்வுள்ளவர்கள். எதிலும் வெற்றிக்கொடி நாட்டுவர். ஒன்றையே நினைப்பார்கள். சிறப்பாக திட்டமிடுவார்கள். இதில் தோல்வி ஏற்பட்டாலும், ‘போனால் போகட்டும் போடா’ என்று ஒரு பாட்டு பாடிவிட்டு, மீண்டும் அதே வேலையைத் தொடங்க

"O” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
`O’ என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா? நாம் அனுபவிக்கும் அனைத்துப் பொருட்களும் இந்த பூமியிலிருந்து தான் விளைகின்றன. சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் உருண்டையாகத்தான் உள்ளன. வேற்றுக் கிரகத்திலிருந்து எந்தப் பொருட்கள் வந்தாலும் அடுத்த கிரகம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இது இயற்கை நியதி. தானுண்டு, தன் வேலை உண்டு, யாரையும் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை, பிறர் தொந்தரவையும் ஏற்பதில்லை என்றிருக்கும் `O’ என்ற எழுத்தில் சூரியக்கதிர்கள் முற்றிலுமாக உட்புக முடியாமல் இருப்பதால் இவ்வெழுத்தில் உள்ளவர்கள் ஏனைய அனைவரிடமிருந்தும் முற்றிலுமாக மாறுபாடான குணாதிசயத்தைப் பெற்றவர்களாக இருப்பர். ஆன்மீகத் தென்றலான இவர்கள் மாபெரும் ஆராய்ச்சியாளர்கள். மந்திரம், தந்திரம், சூட்சும சக்தி, மனவசியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடுடையவர்கள். சாஸ்திர, சம்பிரதாயங்களில் மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நீதியை நிலைநாட்டுவதில் முனைப்பாக இருப்பர். இவ்வுலகத்தில் நடக்கும் அதர்மங்களை நினைத்துக் கண்ணீர் விடுவர். கானகங்களில் குடியிருக்க விரும்புவர். இருப்பினும் சோம, சுராபானங்களில் மூழ்கிவிடுவர் (போதை வஸ்துக்கள்). 50 வயதிற்கு மேல்

"P” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே பொறுப்புகள் தலைமேல் வந்து வீழ்வதால் குடும்ப சூழ்நிலையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும். தீட்டும் திட்டங்கள் அவ்வப்பொழுது தடைபட வாய்ப்புண்டு. ஆனால், இடைவிடாது உழைப்பர். இந்த எழுத்துகளில் பெயர் துவங்குவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிந்தால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பிறர் துன்பத்தை தனக்கு வந்தது போல் நினைத்து அவர்களுக்கு உதவுவர். தற்போதைய நிலையை விட உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அன்பான இவர்களுக்கு அடிக்கடி துன்பங்கள் வந்து ஒரு மகானைப் போன்று மனதை மாற்றிவிடும். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து தெய்வீகத்தில் அதிகபட்ச நம்பிக்கை அல்லது நம்பிக்கை குறைவு கொண்டவர்களாக இருப்பர். அனைத்து துறையிலும் ஆர்வமாக உழைப்பர். இவர்களிடம் மன உறுதி பெற்றவர்களை நோக்கி நல்ல நேரம் தேடிவரும். எங்கு பணியாற்றினாலும் அங்கு இவர்கள்தான் ஆதிக்கம் பெற்றிவராயிருப்பர். பல பேருக்கு உதவிகரமாக இரு

"I” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
‘I’யில் பெயர் துவங்குவோர் வெற்றிக் கனியைப் பறிப்பவர்கள் மனோதிடம் கொண்டவர். தெளிவான சிந்தனை உடையவர். தோல்விகளைத் துச்சமாக மதிப்பவர். கடின உழைப்பும் காந்த சக்தியுடைய கண்களும் கொண்டவர். அரசாங்க, அரசியல் செல்வாக்கும் நாநயமும் உள்ளவர். இந்த எழுத்தில், கதிரவனின் கதிர்கள் பட்டு, இடமும் வலமும் சிதறுவதால், உறுதியும் குழப்பமும் சம அளவில் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் இருக்கும். இவர்களுக்கு அரசியல் பண்ணுவது மிகவும் பிடித்த சமாச்சாரம். அதிகாரம் செலுத்துவதில் மிக முனைப்பாக இருப்பர். யூகத்தின் அடிப்படையில் காரியமாற்றி வெற்றியடைவர். ரோஷக்காரர்களான இவர்களிடம், “உங்களால்தான் எல்லாம் நடக்கிறது” என அவரது புகழ் பாடினால், நமக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வர். இடைவிடாத உழைப்பால் பெரும் பதவியையும் பொருளாதார ஏற்றத்தையும் அடைந்துவிடுவர். பொறாமைக்காரர்களைக் கண்டால் பொசுக்கிவிடுவர். அந்த அளவிற்கு புறங்கூறுதல் இவர்களுக்குப் பிடிக்காத காரியமாகும். இவர்களுக்கு சூடான, காரம் அதிகமுள்ள உணவு வகை பிடிக்கும். கௌரவப் பிரச்சனையால் பல நண்பர்களை இழக்கவேண்டி வரலாம். இவர்களின் குணாதிசயம் ப

"J” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

“J’ என்றாலே ஜெயம்தான் சிறந்த நிர்வாகத் திறமை, நல் எண்ணம், எதிரிகளை பந்தாடும் குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், பின்வாங்காத தீரமும், கடமையை கண்ணியத்துடன் செய்யும் பக்குவம் ஆகிய பண்புகளுக்கு சொந்தக்காரர்கள் ஒ யில் பெயர் துவங்குபவர்கள். கம்ப்யூட்டர் போன்ற நுண்ணிய துறைகளில் அறிவு அதிகம். எதையும் இலக்கு வைத்து அடைவதில் விடாமுயற்சி உடையவர்கள். சுயகவுரவத்திற்காக எதையும் தாங்கும் இதயம் உடைய இவர்களது எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு, இடப்புறம் அதிகமாக சிதறுவதால், மனதில் போட்ட திட்டங்கள், முடியும் நேரத்தில் மனநெருடலை தருவதாக இருக்கும். மகிமை பொருந்திய பூமியின் மேல் உள்ள கடல்நீர் மற்ற கிரகங்களின் மேல் ஊற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு, பூமியின் ஆகர்ஷண சக்தியே காரணம் ஆகும். இதுபோல் இவர்கள் மேல் பற்று வைத்தவர்கள் வேறு யார் பக்கமும் சாயமாட்டார்கள். எதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் பக்குவம் இவர்களை மாபெரும் ஆற்றல் மிகுந்தவர்களாக வெளிப்படுத்தும். தவறு செய்தவர்களை கண்டிப்பதில் யானையைப் போன்றவர்கள். சிறப்பான வ

"K” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம் மிகுந்தவர்களாகவும் மாயசக்தி, மனோவசியம், கற்பனை வளம், கதை, கட்டுரை படைக்கும் ஆற்றல மிக்கவர்களாகவும் இருப்பர். பிறரின் பாராட்டுதலும் கிடைத்துக்கொண்டே இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவது என்பது இயலாத காரியம் என்று நினைத்து, அந்த நினைப்பையே ஒருமுகப்படுத்திவிடுவர். இவர்களின் பயந்த சுபாவமே இவர்களுக்கு பலமாகும். பல இடங்களில், “முகத்தைப் பார்த்தாலே பாவமாக உள்ளது. அவருக்கு என்ன வேண்டும் கேள்” எனப் பல பிரபலங்கள், இவர்களின் வேலையை உடனே முடித்துத் தந்துவிடுவர். இவர்கள் எவரையும் நம்புவதில்லை. தன்னுள் உள்ள ஆற்றலை அடிக்கடி மறந்துவிடுவர். ஒன்று மற்றும் எட்டாம் எண்ணினர் மட்டும்தான் இவர்களை வலுவேற்றக்கூடியவர்கள். ஏழாம் எண்ணினரைத் தேர்ந்தெடுத்தல் நலமாகும். எந்தச் செயலையும் மிகைப்படுத்திப் பேசுவது இவர்களால் மட்டும்தான் முடியும். பிறருக்குப் போதிப்பதில் புத்தனாவர். அடுத்தவர

"L” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
“L” இல் பெயர் துவங்கினால் `லக்கி’தான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம் கொண்ட இவ்வெழுத்தில் சூரியக்கதிர்கள் பாய்ந்து பெயர் முழுக்கப் பரவுவதால் பரபரப்பும், சுறுசுறுப்பும், புத்திகூர்மையும், மனதில் பட்டதை தயங்காமல் கூறும் குணாதிசயமும் இவர்களை என்றும் அரங்கத்தில் முந்தியிருக்கச் செய்யும். கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும். உண்மைக்குப் பெயர் போன இவர் களால் உலகிற்கே பெருமை கிட்டும். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவர்கள் இவர்கள். இதனால் பலருடைய வருத்தத்தைச் சம்பளமாகப் பெறும் சங்கடங்களுக்கு உட்படுவர். இறைவன் மேல் கடும் பற்று உள்ள இவர்களுக்கு, மத நம்பிக்கையும் அதிகம். ஆனால் மூட நம்பிக்கைகளை அதிகம் வளர்த்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. `புராணங்களையும், இதிகாசங்களையும், உபநிஷத்துக்களையும், சாஸ்திரங்களையும் மனிதர்கள்தானே இயற்றினர்! அதுபோல எனது கருத்துகளும் வருங்காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறும்’ என இவர்கள் ஆணித்தரமாக அடித்துக் கூறுவர். நாட்டுப்பற்று மிகுந்த இவர்கள் நல்ல உழைப்பாளியாகவும், நாணயம் மிகுந்தவராகவும், அடுத்தவர் சொல்லை மதிப்

"M” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
M’ என்ற எழுத்தில் பெயர் துவங்குகிறதா? வேதங்களை விலாவாரியாக அலசுவது, விவாதம் செய்வது, வீரமான மனது இவற்றை இயல்பாகவே பெற்றவர்கள் `M’ என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்கள். ஆனால் குற்றம் கண்டுபிடிப்பது இவர்களின் பலவீனமே. யாரும் செய்ய முடியாத காரியங்களைச் செய்வது இவர்களின் விசேடத்தன்மையாகும். தாங்கள் நினைக்கும் கருத்துகளைப் பிறரிடம் கட்டாயப்படுத்தித் திணிப்பர். கயமைத்தனத்தை எதிர்ப்பது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது இவர்களின் சிறப்பாகும். இவர்களுக்கு வாய்தான் எதிரி. ஆனாலும் அழகான உச்சரிப்பினால் மக்களைக் கவர்வர். நாடு நன்றாக இருக்க வேண்டும், யாருக்கும் எந்தத் தீங்கும் நடக்கக்கூடாது என்பதில் அக்கறையாக இருப்பர். “அரசாங்கத்தின் பல திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை. எனவே, அந்தத் திட்டத்திற்குப் பதில் வேறு திட்டங்களை அறிவிக்க வேண்டும்” எனப் பேசுவதுடன், அதற்காகப் போராடவும் செய்வர். தன் சுதந்திரத்தில் யாரும் தலையிட விரும்பாத இவர்கள் பிறரது சுதந்திரத்திற்காகவும் போராடுவர். உலகில் உள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் இவர்களிடம் தெரிந்து கொள்ளலாம். சுற்றுப்பயணம் செல்வதில் மன்னர்கள். இயற்கைக் காட்சியை ரச

"N” என்ற எழுத்தில் பிறந்தவர்கள் எப்படி ?

Image
யாராலும் அடக்க முடியாத `N’ எழுத்துக்காரர்கள்! எந்த ஜீவனாக இருந்தாலும் ஐம்பெரும் பூதங்களின் ஆதரவு இருந்தால்தான் வாழ முடியும். அதுபோலவே, N என்ற எழுத்தில் சூரியக் கதிர்கள் பட்டு அதற்குள்ளேயே இருப்பதால், சகலமும் அறிந்த இந்த பிரஹஸ்பதிகளை எவராலும் எளிதில் அடக்க முடியாது. பிறர் செய்து முடிக்க முடியாத காரியங்களை லாவகமாக முடிப்பர் இந்தக் கில்லாடிகள். அனைவரையும் தன் செயல், பேச்சால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இவர்களது சிறப்பு. தூக்கம் என்பது பிடிக்காத காரியம். தூங்குமூஞ்சிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை. நடை, உடை, பாவனைகளாலும் இவர்கள் பிறரை அசத்துவர். ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர்கள். பிரபலங்கள் தன் ஆஸ்தான ஆலோசகர்களாக இவர்களை வைத்துக்கொள்வதுண்டு. பிறரின் கருத்துகளை உடனடியாக உட்கிரகித்துக்கொள்வதில் வல்லவர். சினிமா, நாடகங்களில் நீண்ட வசனங்கள் கொடுத்தாலும் நொடியில் பேசிவிடுவர். எதையும் பரபரப்பாகச் செய்வதில் விருப்பம் கொள்வர். இவர்களில் பலர் 9ஆம் வகுப்பு படிக்காமலேயே 12ஆம் வகுப்பு படித்துத் தேறிவிடுவர். அவ்வளவு ஆற்றல் மிகுந்தவர்கள். பழைமை வாதத்தை எதிர்ப்பர். எந்தச் செயலிலும் சிறிதும் தயக்கமின

`D’ என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா?

Image
'D' என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள் ராஜதந்திரத்துடன் செயல்படுவார்கள். ஆற்றல்மிக்க பேச்சால் பலதரப்பு மக்களின் நட்பையும் பெறுவார்கள். அதேவேளை, எதிர்ப்பையும் அதிகமாகவே சம்பாதிப்பார்கள். குடல், கண், தொடர்பான நோய்கள், மூட்டுவலி, பித்தம் போன்றவற்றால் அவ்வப்போது அவதிப்படுவார்கள். ஆணாயினும், பெண்ணாயினும் இல்லறத்துணை சிறப்பாக அமையும். அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் பெறுவார்கள். கடவுள் நம்பிக்கையும் கைகொடுக்கும். துன்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். சுவை மிகுந்த உணவு வகைகளில் விருப்பம் அதிகம். சாப்பாட்டில் காரமும், அசைவ வகையும் அதிகமாக இருக்கும். சிலர் தொண்டு நிறுவனங்கள் நடத்திப் பெரும் புகழும், பணமும் சேர்ப்பர். அரசின் கட்டுப்பாடுகள் மக்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில், எல்லோரும் ஏற்கும்படி சட்டத்தை மாற்ற வேண்டும் எனப் போராடுவார்கள். சோர்ந்து கிடக்கும் நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் சுறுசுறுப்பாக இருக்கும்படி அறிவுரை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். தான் செய்தது தவறு என்றால் அதை ஒப்புக்கொண்டு தன்னை விட வயதில் குறைந்தவராக இருந்த