விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் மேனன்

திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா ‘கூடல்–2015’ என்ற பெயரில் கல்லூரி கலையரங்கில் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவன். தற்போது திரைப்பட இயக்குனராக உள்ளேன். என் வாழ்வில், என்னை சுற்றி நடந்த சம்பவங்களை வைத்து தான் படம் இயக்குகிறேன். நான் எடுக்கும் படத்தை தியேட்டரில் மக்களோடு, மக்களாக அமர்ந்து படம் பார்ப்பேன். அப்போது தான் அவர்களின் மனநிலையை அறிய முடியும். மக்கள் ரசனைக்கு ஏற்ப படம் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் மாணவ–மாணவிகளின் கேள்விகளுக்கு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் அளித்தார்.

கேள்வி:– இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவது எப்போது?

பதில்:– இதுவரை 14 படங்கள் இயக்கி உள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சொல்லும் கதை அவரை திருப்தி படுத்த வேண்டும். கதையின் மீது அவருக்கு நம்பிக்கை வர வேண்டும்.

கமல் சாரிடம் 15 நிமிடங்களில் ‘வேட்டையாடு விளையாடு’ கதையை சொல்லி படத்தை இயக்க சம்மதம் பெற்றேன். இந்த குறுகிய நேரத்தில் கமலை திருப்திபடுத்த சினிமா குறித்த தொலை தொடர்பு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

கேள்வி:– மெக்கானிக்கல் என்ஜினீயரிங், திரைப்பட இயக்குனர் இந்த இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது?

பதில்:– மெக்கானிக்கல் என் ஜினீயரிங் படிப்பு இல்லை என்றால் திரைப்பட இயக்குனர் இல்லை. கல்லூரி படிப்பு இல்லைன்னா திரைப்பட துறையில் நான் இருப்பது கடினம்.

கேள்வி:– உங்கள் படங்களில் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்?

பதில்:– தமிழ் படத்தில் தமிழ் பேச தெரிந்த நடிகையை நடிக்க வைக்கும் போது தான் சரியான மொழி உச்சரிப்பை பெற முடியும். அந்த வகையில் நடிகை சமந்தாவிற்கு 3 மொழிகள் பேச தெரியும். எனவே நடிகை சமந்தாவை ரொம்ப பிடிக்கும். அதே போல் நடிகை திரிஷா வையும் பிடிக்கும்.

கேள்வி:– ஹாலிவுட் படம் இயக்குவீர்களா? இயக்கினால் யாரை ஹீரோவாக தேர்ந்து எடுப்பீர்கள்?

பதில்:– அஜித்தை வைத்து ஹாலிவுட் படம் இயக்குவேன்.

கேள்வி:– மின்னலே, விண்ணைதாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் 2–ம் பாகம் இயக்குவீர்களா?

பதில்:– விரைவில் என்னை அறிந்தால் 2–ம் பாகம் இயக்குவேன்.

கேள்வி: நட்பு–காதல் இவற்றில் எது சிறந்தது?

பதில்:– நட்பு தான் சிறந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood