அமெரிக்கர்களை கொன்று குவிப்போம்: ரத்தவெறியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)

அமெரிக்க இராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் கொன்று ரத்தத்தில் மூழ்கடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிவிட்ட ஐ. எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் யாஸிதி சிறுபான்மையின மக்களை காப்பாற்ற அமெரி்க்கா தனது விமானப்படையினரை அனுப்பி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது.

எனினும் தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் தினந்தோறும் நகரங்களை கைப்பற்றி வருவதால், அமெரிக்கா தனது தாக்குதலை விரிவுபடுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் காணொளி ஒன்றின் மூலம் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் தலை கொடூரமாக வெட்டப்பட்டுள்ள இந்த காணொளியில், ஆங்கில தலைப்புடன் ஓடியோ அறிக்கை ஒன்றை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியதாவது, எங்களது வீரர்கள் யாரையாவது அமெரிக்க விமானப்படையினர் தாக்கினால், மிக மோசமான பதிலடியை நாங்கள் கொடுப்போம் என்றும் அமெரிக்கர்களை எங்கு கண்டாலும் கொன்று குவித்து, ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood